(ஆதவன்)
காய்ச்சல் காரணமாகப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது-53) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.
கடந்த 29 ஆம் திகதி இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.