(புதியவன்)
ஹங்கேரி அரச தலைவர் திருமதி கேட்லின் நோவக் தனது பதவியை இழந்தார்.
ஹங்கேரிய அரச தலைவர் தனது பதவி விலகலை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் பாலியல் துர்நடத்தை வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்த குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதாக தன்னால் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து ஹங்கேரியின் அரச தலைவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஆதரவற்றோர் இல்ல இயக்குனர் ஒருவருக்கு எதிரான பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு குழந்தைகளை கட்டாயப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நபருக்கு அரச தலைவர் கேட்லின் நோவக் மன்னிப்பு வழங்கினார்.
இதனை முன்னிட்டு அரச தலைவர் பதவி விலக வேண்டும் என்று ஹங்கேரியில் கூறி எதிர்ப்பாளர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
குறித்த நபருக்கு மன்னிப்பு வழங்கியதில் தவறிழைத்து விட்டதாக ஹங்கேரி அரச தலைவர் கேட்டலின் நோவக் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.