காவல்நிலையத்தில் சரணடைந்த பேருந்து சாரதி!
யோகி.
அரச பேருந்து மற்றும் இராணுவ வாகனம் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 06பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை A9வீதியின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்காவிலில் இடம்பெற்றுள்ளது.
துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்தின் சாரதியும் காயங்களுடன் மாங்குளம் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி காவல்துறையினால் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.