செல்வன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று புதன்கிழமை (14) கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை, யானை வேலி அமைத்தல், வீதி வேலைகள், வீடு மற்றும் காணி பிரச்சினைகள் அத்தோடு தனியார் பேருந்து வழியனுமதி பத்திரங்களை புதுப்பித்தல், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் விரிவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அபிவிருத்தி குழு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இக்கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர், நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், பணிமனை தலைவர்கள், பிரதேச சபையின் செயலர், காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.