செல்வன்.
முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் விளையாட்டுத் திருவிழாவானது பாடசாலையின் தரம் 04 மாணவன் ஜெகன் ரிஷானன் தலைமையில் நேற்றுமுன்தினம் (06) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன.
விளையாட்டுப்போட்டியானது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அணிநடை மரியாதை, விளையாட்டு நிகழ்வுகள், விநோதஉடை, இடைவேளை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு விழாவின் பிரதமவிருந்தினர்களாக பாடசாலை பழைய மாணவரும் கட்டமைப்பு பொறியியலாலருமான ஞானமனோகரசீலன் கருணாகரன், பழைய மாணவியும் இலங்கை வங்கி முகாமையாளருமான ராஜிதா கீரன் மற்றும் பழைய மாணவரும் மாத்தளன் றோ. க. அ. த. க பாடசாலை அதிபருமான தாமோதரம்பிள்ளை மங்களரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த விளையாட்டு திருவிழாவில் பாடசாலை அதிபர், பாட்சாலையின் முன்னாள் அதிபர்கள் , ஓய்வு நிலை கல்விப்பணிமனை அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.