(புதியவன்)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி ஒருவரையும் மற்றும் இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு நேற்று 09 பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தநிலையில் குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடையவரும் உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனுமே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட மரத்துவ தகவல்கள் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸ் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.