ஆதவன்
புதுக்குடியிருப்பு- மன்னாங்கண்டல், வசந்தபுரம் பேராற்றுக்கு குடிதண்ணீருக்காக ஆடுகளைக் கொண்டு சென்ற பெண் ஒருவர் முதலையால் கடியுண்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 7ஆம் திகதி நடந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாமிநாதன் விசாலாட்சி (வயது- 47) என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார். பெண்ணின் வலது கையை முதலை கடித்துள்ளது.
அதில் படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.