மாவட்டச் செயலரிடம் மக்கள் கோரிக்கை!
(ஆதவன்)
முல்லைத்தீவில் இன்னும் 2 ஆயிரத்து 500 ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் காணிகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அரச தலைவருக்கும் மாவட்டச் செயலருக்கான மனுவையும் நேற்றுக் கையளித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
“முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தெந்த முகாம்கள் அகற்றப்படும் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதற்குள் இது உள்ளடக்கப்படவில்லை. எதிர்காலத்தில் விடுவிக்கப்படுமோ தெரியவில்லை” என்று மாவட்டச் செயலர் மக்களிடம் தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.