செல்வன்.
சமூக சேவைகள் பணிமனையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை(12) மாவட்ட செயலர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண் பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.
லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் முதன்மையான நிதி அனுசரணையோடும் சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு,
பெரண்டினா, வரோட், ஓகன் முதலிய நிறுவனத்தினரின் நிதி பங்களிப்புடனும் இந்த விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச கடைகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வரும் வீராங்கனை திருமதி. சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் மருத்துவ அதிகாரி மருத்துவர் கலாநிதி க.சுதர்சன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், உதவிப்பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குரிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.