(ஆதவன்) (ஏ)
பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்ட வரை அதே பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மணியர்குளத்தைச் சேர்ந்த சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை (வயது - 76) என்பவரே உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்துத் தரிப்பிடத்திலேயே நேற்றுக்காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தில் ஏறுவதற்காக வீதியின் மறு பக்கத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார். பேருந்தின் முன்பக்கமாக வந்த பயணியைக் கவனிக்காமல் சாரதி பேருந்தை இயக்கியமையால், பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.