(புதியவன்)
கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ளை ஈ தாக்க காரணமாக தேங்காய்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்கள் மற்றும் தென்னை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்கம் காரணமாக பலரது தென்னை தோட்டங்கள் வென் ஈ தாக்கத்தின் காரணமாக தென்னை மரங்களில் வெறுமனே மரங்களாக காணப்படுவதாகவும் வெள்ளை ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குறும்பை கூட இல்லாத நிலையிலும் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக மட்டுமே காணப்படுகின்றன.
இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காயின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கையில் ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயை விட நாளில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக முட்டைக்கு ஏற்பட்ட நிலையே தேங்காய்க்கும் ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் இனிவரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் தென்னை பயிர்செய்கையாளர்களைபாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.