செல்வன்
வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம் இடம்பெற்று வருகிறது.
இன்று காலை முதல் ஆலயத்திலே சிறப்பு பூஜை வழிபாடுகளும் அடியார்களுடைய நேர்த்திக்கடன்களும் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
இரவு ஆலயத்துக்கு மடப்பண்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பு பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இன்று பகல் வேளையிலே அதிக வெப்பம் காரணமாக குறைந்த அளவான பக்தர்களே ஆலயத்துக்கு வருகை தந்திருந்த போதும் இரவு வேளை அதிகளவான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்ததோடு அதற்குரிய ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்
இதேவேளை, ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை பல்வேறு பணிமனையினரும் மேற்கொண்டுள்ளனர்.
விசேடமாக அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.(க)
5rzf8h
5gpqom
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.