செல்வன்.
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் “ஈடு இணையற்றது நம் உடலில் ஓடும் குருதி! அதை பிறர்க்கும் சிறிது பகிர்ந்தளிக்க ஏற்போம் இந்தநாளில் உறுதி!” எனும் தொனிப்பொருளில் குருதி நன்கொடை வழங்கும் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் குருதிகொடை வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(26) காலை இடம்பெற்றது.
குறித்த குருதி கொடை வழங்கும் நிகழ்வில் இளைஞர்கள், இளம் குருதி கொடையாளர்கள், இராணுவத்தினர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உறுப்பினர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் குருதி வழங்கி இருந்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.