பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
செல்வன்.
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினரிடமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று புதன்கிழமை(27) கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனவீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி அரசதலைவருக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கும் மனு ஒன்றினையும் கையளித்த நிலையில் தீர்வுகள் கிடைக்கப்பெறாமையாலேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.