அரசதரப்பு அமைச்சர் தெரிவிப்பு!
இனியபாரதி.
வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அரசதரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல்வீடுகள் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.