மாதவன்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை(28) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட பதில் மாவட்ட செயலர் பிரதீபனின் ஒழுங்குபடுத்தலில் ஆரம்பமான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண அவைத் தலைவர் கே.வி.சிவஞ்ஞானம், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.