மாதவன்.
வீட்டில் இருந்து கடந்த வருடம் ஒக்டோபர் 20ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்:
யாழ்ப்பாணம் - கீரிமலை வீதி நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன்(வயது 46) என்பவர் வீட்டிலிருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் புறப்பட்டு சென்றதிலிருந்து 5ஆவது நாள் அவரது கைப்பேசி இயங்கவில்லை. இந்நிலையில் அவரது மனைவி இது குறித்து கடந்த பெப்ரவரி 1ஆம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் இதுவரை குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் யுத்த காலத்தில் கண்ணிவெடியில் சிக்கியதில் கால் பறிபோயுள்ளது. இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 0766348367, 0740910152, 0763934822 என்ற இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு குடும்பத்தவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.