புதியவன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளின் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு விஞ்ஞான பிரிவில் கற்கும் ஆர்வத்தினை ஏற்படுத்துமுகமாக யாழ் இந்துக் கல்லூரிக்கான பயணமொன்றை நேற்று வியாழக்கிழமை(28) ஒழுங்குபடுத்தப்பட்டு அவர்களுக்கு இரசயானவியல், பெளதீகவியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான முதலாம் தவணை பரிசோதனைகள் இடம்பெற்றன. தொடர்ச்சியாக நிகழ்நிலையில் கற்பித்தலை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் மேற்படி மாணவர்களுக்கு நிகழ்த்தவுள்ளனர்.
இதன்போது அறிவியல் அமுது அறக்கட்டளை மாணவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.