புதியவன்
பெரியோர்களாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு கல்வியே. நிலம், சொத்து, வாகனங்கள் திருடப்படலாம், ஆனால் கல்வி அறிவை யாராலும் திருட முடியாது.
நாட்டில் அதிகளவான மக்கள் வறியவர்களாக மாறிவிட்ட துர்ப்பாக்கிய நிலையில் அந்த வறுமையைப் போக்க கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மதத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் நவீன (ஸ்மார்ட்) தொழில்நுட்பத்துடன் வலுவூட்டப்பட வேண்டும்.
சாதி, மத பேதங்களை புறமொதுக்கிவிட்டு, இந்நோக்கத்துக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
76 வருட ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு, அரசாங்க அதிகாரம், அரசாங்க பதவிகள் ஏதுமின்றி நாட்டுக்காக சேவை செய்த ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் சஜித் கூறினார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 138 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வவுனியா - செட்டிக்குளம், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளைப் பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் சஜித் பிரேமதாச வழங்கினார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.