புதியவன்
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
குற்றச்செயல் தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் குறித்த கைதிக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாகவே குறித்த கைதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.