புதியவன்
வவுனியாவில் இடம்பெற்ற சித்திரை கலை விழாவில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் நகரசபை மைதானத்தில் சித்திரை கலை விழா நிகழ்வு நேற்றுக் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இதன்போது, பல்வேறு விடயங்களை மையப்படுத்திய கண்காட்சிக் கூடங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதூர் நாகதம்பிரான் கோவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.