புதியவன்
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிகாலை தாய்லாந்து நோக்கிப் பயணமாகியுள்ளார்.
மைத்திரியுடன் மேலும் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் குழப்ப நிலைக்கு மத்தியில் அவரது இந்தப் பயணம் அமைந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவிசாளர் பதவியை வகிக்க மைத்திரிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பதில் தவிசாளராக அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு கூறியுள்ளது. இதற்கிடையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று காலை பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபால தலைமையிலான குழுவொன்று அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன நேற்று அதிகாலை தாய்லாந்து நோக்கிப் பயணமாகியுள்ளார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.