அரசதலைவர் தேர்தல் நெருங்கி வருவதால் வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்தவேண்டும் என்று அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களுக்கும், அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அவசர கட்டளை பிறப்பித்துள்ளார். மேதினக் கூட்டத்தின் பின்னர் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்த அரசதலைவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. அரசதலைவர் தேர்தலை நேரடி இலக்காகக் கொண்டு அரசியல் பணிகளைத் தொடங்குவதற்கான திட்டத்தை ரணில் வகுத்துள்ளார். இந்த ஆண்டு மே தினப் பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த ரணில் திட்டமிட்டுள்ளார். தற்போது நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில் ஐ.தே.க. ஈடுபட்டுளளது. பல கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து கொள்ளவுள்ள பரந்த கூட்டணியைப் பிரதிநிதித்து வப்படுத்தி அரசதலைவர் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கும் நோக்கில் ரணில் இந்தத் திட்டங்களை வகுத்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.