புதியவன்
பண்டிகைக் காலத்தில் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் செயலாளர் பாலித மஹீபால தெரிவித்தார்.
பொதுவாக பண்டிகைக் காலங்களில் விபத்துகள், உணவு விசம் மற்றும் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருகிறது.
விபத்துக்கள், உணவு விசமான சம்பவங்கள் மற்றும் தொற்றா நோய்கள் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளர்களுக்கு துரித சேவைகளை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் மஹீபால தெரிவித்தார்.
அவசர காலங்களில் உடனடி சேவைகளை வழங்க நோயாளர்காவு வண்டிகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.