(ஆதவன்)
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொது ஜனபெரமுனக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பெரமுனவினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ரணில் இணங்கவில்லை. அதேபோன்று, பெரமுனவின் பொதுவேட்பாளராக ரணிலைக் களமிறக்கும் முயற்சியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொதுவேட்பாளராக ரணிலை அறிவிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுன இரண்டு குழுக்களாகப் பிளவடைந்து நிற்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரச தலைவர் ரணிலுக்கும், மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்பு பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பின்போது, பெரமுனவின் முக்கியஸ்தரான பஸில் ராஜபக்ச உள்ளிட்ட வேறு சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர். சந்திப்பின் பின்னரே அரச தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் பெரமுனவின் நிலைப்பாடு தெளிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.