புதியவன்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்காக இன்று மற்றும் நாளை (15,16) சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப குறித்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடருந்தில் வரும் பயணிகளின் வசதிக்காக சில சிறப்பு தொடருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து சேவைகள் பணிமனையின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.