(ஆதவன்)
கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வெற்றியளிக்கவில்லை என்று அரச தலைவரின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். கடன் கொடுநர்களுடன் லண்டனில் நடைபெற்ற பேச்சின்போது நான்கு விடயங்கள் பேசப்பட்டன. இதில் இரண்டு விடயங்கள் தொடர்பில் இன்னமும் இணக்கப்பாடு காணப்படவில்லை.
அதேவேளை இலங்கை அண்மையில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச கடன் கொடுநர்களும் திருப்தி வெளியிட்டுள்ளனர் என்றும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.