செல்வன்.
சித்திரா பௌர்ணமி தினமான நேற்றுச் செவ்வாய்க்கிழமை(23) முல்லைத்தீவு மாங்குளம் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று (23) காலை முதல் இன்று (24) அதிகாலை வரை இடம்பெற்ற உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தூக்குக்காவடி, காவடி, பால்செம்பு, கற்ப்பூரச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செய்து கொண்டதோடு அர்ச்சனை செய்து பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை நேற்று (23) இரவு எம்பெருமானுக்கு வசந்த மண்டப பூசைகள் சிறப்பாக இடம்பெற்று எம்பெருமான் உள்வீதி வலம் வந்து முத்துச்சப்பறத்தில் வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.