கதிர்காமத்திற்குச் செல்ல தாய் மறுப்புத் தெரிவித்ததால் இரட்டை சகோதரிகள் காணாமல் போய் உள்ளனர். இந்த சிறுமிகளின் தோழி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்லவிருந்ததாகவும், அவர்களுடன் செல்ல அந்த இரட்டையர்கள் தாயாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர் மறுத்ததாகவும் கதிர்காமம் செல்வதற்காக சிறுமிகள் இருவரும் தாயிடம் 500 ரூபாய் கேட்ட போதும் , தாய் அதைக் கொடுக்கவில்லையெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இன்று வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.