அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை அறுவைச்சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்தி அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இச் சம்பவம் உலகில் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை பெற்ற நோயாளி இரண்டு நாட்களுக்கு பின் பூரண குணமடைந்துள்ளார்.
குறித்த நபரின் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மனிதர்களின் இதயத்தை பொருத்த முடியாத நிலையில் பன்றியின் இதயத்தில் சில மாற்றங்களை செய்து அதனை அவருக்கு பொருத்தியுள்ளனர்.
குறித்த அறுவை சிகிச்சையில் நல்ல முன்னேற்றங்கள் தெரிவதாகவும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்தாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு குறித்த மருத்துவ குழு இறக்கும் நிலையில் இருந்த நபரொருவருக்கு பன்றியின் இதயத்தை பொருத்தினர். எனினும் அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார்.
வைரஸ் தொற்று காரணமாகவே குறித்த அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாகவும் இம்முறை வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவ ஆய்வுகள் முழுமையடைந்ததில், தற்போது இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில மருந்து மாற்றங்களையும் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த முறைமுதல் நோயாளியைப் போல மரணம் அடையும் அளவுக்கு குறித்த நோயாளியின் உடல்நிலை மோசமடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.