நேற்று முன்தினம் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் நபரொருவர் தன் மீது பெற்றோல் ஊற்றி தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சலீம் என்னும் குறித்த நபர் மகளை துன்புறுத்தி வருவதாக அப்பிள்ளையின் தாயின் சகோதரி ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டுக்கமையே விசாரணையயை மேற்கொள்ள குறித்த நபரின் வீட்டுக்கு பொலிஸார் சென்ற போதே அவர் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகளை காப்பாற்றியுள்ளதுடன், காப்பாற்ற முற்பட்ட பொலிஸார் தீக்காயமடைந்து மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது மகள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.