காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் முன்னால் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவர் காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (27.04.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் சம்பவதினமான இன்று குறித்த வியாபாரியின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்று கஞ்சா வேணும் என கேட்டுள்ளார்.
இதனையடுத்து கஞ்சா வியாபாரி குறித்த பாடசாலைக்கு முன்னால் வருமாறு கூறியதையடுத்து மாறுவேடம் பூண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்டு கேரள கஞ்சாவை வாங்கும் போது கையும் மெய்யுமாக குறித்த நபரை சிறிய பக்கட் கொண்ட கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.