புதியவன்.
இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு வாவியோரங்களில் கண்டல் தாவரங்கள் நாடும் நிகழ்வு நேற்றுப்புதன்கிழமை(28) இடம் பெற்றது.
மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை தளபதி குறுப் கப்டன் சரத் பண்டார தலைமையில் சேற்றுக்குடா, சுமைதாங்கி பகுதி வாவிக்கரை ஓரங்களில், சிறந்த சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் இக்கண்டல் தாவரங்கள் நடப்படுவதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மட்டக்களப்பு விமானப்படைஉத்தியோகத்தர்களால் முதற்கட்டமாக 500 கண்டல் தாவரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.