புதியவன்
திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் சாவுக்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார மருத்துவமனைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் உயிரிழந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார மருத்துவமனைக்கு முன்பாக ஒன்று கூடி மாணவனின் சாவுக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் என தெரிவித்து நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலயத்தின் பின் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினர்.
மேலும் இச்சம்பவத்தில் திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் ,சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் ஆதார மருத்துவமனை அருகில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.