ஈரானையும் இஸ்ரேலையும் மோதவிட பொம்மை ஏவுகணை!
ஆதவன்.
ஈரானுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது அல்ல என்று ஈரான் வெளிவிவகாரத்துறை அறிவித்துள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் போக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கருதும் சில தரப்புகளால் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அந்த ஏவுக ணைகள் ஆபத்தை ஏற்படுத்தும் ஏவுகணைகள் அல்ல. பொம்மை ஏவுகணைகள் என்றும் ஈரான் வெளிவிவகாரத்துறை அறிவித்துள்ளது.
சிரியத் தலைநகர் டமஸ்கஸில் கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் போர்த் தந்திரிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் உள்ளடங்கலாக 11 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் இஸ்ரேலின் தெற்குப்பகுதியில் உள்ள இராணுவத்தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
இதையடுத்து ஈரானுக்குள் நேற்றுமுன்தினம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவை வானில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டன என்று ஈரான் அறிவித்தது. இஸ்ரேலே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் போர் ஏற்படவுள்ளதாகவும் கருதப்பட்ட பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது அல்ல என்று ஈரான் வெளிவிவகாரத்துறை அறிவித்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.