(இனியபாரதி)
யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்டகால காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மாடு வெட்டும் இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் யாழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது நான்கு மாடுகள் வெட்டப்பட்டு தலைகள் உட்பட மாட்டின் உடற் பகுதிகள் அந்த பகுதியில் காணப்பட்டன. 21 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன. அத்துடன் 4 பெரிய ஆடுகள், இரண்டு குட்டி ஆடுகளும் மீட்கப்பட்டன. திருட்டு மாடுகள் பிடித்து வரப்பட்டு இந்த இடத்தில் வைத்து வெட்டப்படுகின்றது.
ஒரு நாளைக்கு 6 மாடுகள் வெட்டப்படுவதாக கூறப்படுகிறது. மாடு வெட்டிக்கொண்டிருக்கும்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கமால், உயிருடன் மீட்கப்பட்ட மாடுகள் உணவுகள் இன்றி காணப்படுகின்றன. மீட்கப்பட்ட மாடுகளுக்கு பொலிஸாரே தண்ணீர் வைத்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.