உரிமையாளருக்கு 40ஆயிரம் அபராதம்!
இனியபாரதி.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை(24) சுழிபுரம் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் பழுதடைந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத பலசரக்கு விற்பனை நிலையம் சிக்கிக்கொண்டது.
மேற்படி பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிராக சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் நேற்று வியாழக்கிழமை (25) மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இன்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் பலசரக்கு கடை உரிமையாளருக்கு ரூபா 40ஆயிரம் தண்டம் விதித்து கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது. மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.