(மாதவன்)
வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் (03.05.2024)இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அறுவர் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று சாலை கடற்பகுதியில் வைத்து குறித்த ஆறுபேரும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.