புதியவன்.
2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் ஆட்பதிவு பணிமனை நாளை சனிக்கிழமை(04) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு பணிமனையின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அலுவலகங்கள் நாளை காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பல பரீட்சை அனுமதி அட்டைகளில், பாடங்கள், மொழி மூலங்கள் உள்ளிட்டவை பிழையாக அச்சிடப்பட்டுள்ளதையடுத்தே குறித்த பணிமனை திறக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக பரீட்சை பணிமனியைத் தொடர்பு கொண்டு வினவிய போது, தனியார் பரீட்சார்த்திகள் சிலரின் பரீட்சை அனுமதி அட்டைகளில் இவ்வாறான சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இது பரீட்சையில் பாரிய தாக்கத்தைச் ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.