(மாதவன்)
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் - விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்னால் உள்ள தனது கடையில் தங்கியுள்ள நிலையில் அவரது வீடு தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 க்கும் தீயணைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வீடு தீப்பற்றியமை தொடர்பில் காரணம் இது வரைக்கும் வெளியாகவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உரிமையாளர் மேலும் தெரிவித்தார். மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.