வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
(புதியவன்)
கொரோனா வைரஸை (கொவிட் - 19) கட்டுப்படுத்துவதற்காக ஏற்றப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் இதுவரையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகாமையகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, தேசிய செய்தித்தாள் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.
ஃபைசர் தடுப்பூசி ஏற்றப்பட்ட 8 ஆயிரம் பேரும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற ஆயிரத்து 500 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசிகள் மீளப்பெறப்பட்டுள்ளன.
அத்துடன் இத் தடுப்பூசியானது, மூன்று பில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்றப்பட்ட பின்னரே திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதும் இது தொடர்பான விவாதம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.