நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் இறங்காமல் அங்குள்ள இருக்கையில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
பேருந்தின் நடத்துனர் பெண்ணை அணுகி அவரை எழுப்பிய போதும் அவர் எழும்பவில்லை.
சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டமையால் அந்தப் பெண்ணை பேருந்தில் மஹரகம பொலிஸாரிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். பொலிஸார் பேருந்தை சோதனையிட்ட போது பெண் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் மரண விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
அவரது அடையாளத்தை உறுதி செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.