வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங் கத் தலைவி உட்பட 7 பேர் நேற்றுமுன்தினம் கைது செய் யப்பட்ட நிலையில், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர் எனவவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டம் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றபோது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இரு அணியினருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பில் இரு பகுதியினரும் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 பேரையும் பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளதுடன், இணக்கசபையில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.