புத்தளத்தைச் சேர்ந்த சிறுமியொருவரைக் காணவில்லை என்று முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில், அவருடன் குடும்பமாக இருந்த குற்றச்சாட்டில் வவுனியா இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதியன்று பொலிஸாரிடம் சிறுமியைக் காணவில்லை என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சமூக வலைத்தளங்களிலும் அது தொடர்பில் விளம்பரப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே வவுனியா நகர், இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவருடன் அந்தச் சிறுமி தங்கியிருப்பதை அவதானித்த அயலவர்கள் இது தொடர்பில் கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அந்தச்சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
அவர் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.