மன்னாரில் இன்று சுனாமி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளது என்றும் பொதுமக்கள் அதனால் அச்சமடையத் தேவையில்லை என்றும் மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்படும் சுனாமிப் பேரழிவில் இருந்து எவ்வாறு மாணவர்களும் பொதுமக்களும் தப்பித்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு முன்னேற்பாட்டு நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை மன்/ தாழ்வுபாடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
மன்னார் பிரதேச செயலகம், மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் பல திணைக்களங்கள் ஒருங்கிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
முப்படையினர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர் இணைந்து இந்த சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த ஒத்திகை பற்றிய தகவல்களை அறிந்திராத பொதுமக்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.