தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். இவர் தான் நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடி வரை வாங்கி வருவதாக கூறப்பட்டது. கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கு கூட அவர் சம்பளமாக 10 கோடி வரை வாங்கியதாக கூறப்பட்டது.
இப்படி ஒரு படத்திற்கு நடிக்கவே 10 கோடி சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். ஆனால், தற்போது அவரையே நடிகை திரிஷா மிஞ்சி இருக்கிறாம். த்ரிஷா கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு முன்பு வரை அவர் சம்பளமாக 3 கோடி வாங்கி வந்தார்.
அதன் பின், லியோ படத்தில் நடிக்கும்போது தனது சம்பளத்தை 2 கோடிகள் உயர்த்தி 5 கோடி வாங்கினாராம். லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், தற்போது நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். கிட்டத்தட்ட லியோ படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடிகளுக்கு மேல் கேட்கிறாராம்.
இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் த்ரிஷா தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 10 கோடிகளுக்கு மேல் வாங்கி வருவதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த நாயன்தாராவை தற்போது த்ரிஷா பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.