விபத்தினை ஏற்படுத்திய சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மதுபோதையில் காணப்பட்டதாக வைத்திய அதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிப்பர் வாகனம் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக அச்சுவேலி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மதுபோதையில் இருந்தமையை கண்டறிந்த சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக முதல் கட்டமாக திணைக்கள மட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.