எழிலன்
வவுனியாவில் விடுதலைப் புலிகளுக்கு சேறுபூசும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்தில் செய்திசேகரித்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிராகவும் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு மிக அருகாமையில் தபால் நிலையத்துக்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது படங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 'மெய்யான தலைவர்கள்' என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த பதாகைகளில் 'விடுதலைப் புலிகளால் அவர்கள் கொல்லப்பட்டனர்' என்பதான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. அதை முன்னாள் போராளியொருவர் நேற்றுமுன்தினம் அகற்ற முற்பட்ட நிலையில், அவரை வவுனியாப் பொலிஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது நீதிவான் அவருக்குப் பிணை வழங்கினார். அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கு எதிராகவும் பொலிஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.