இந்தியாவில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாளை மறுதினம் (20.04.2023) நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தலாய் லாமாவும் பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் இன்னும் அவரின் வருகை உறுதிசெய்யப்படவில்லை என்றும் இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சி மாநாட்டின் கருப்பொருள் 'இன்றைய உலகின் மிக அழுத்தமான சவால்களுக்குப் பௌத்த பதில்' என்று குறிப்பிட்ட அமைச்சர், 'பௌத்த மதத்தின் பிறப்பிடமான இந்தியா இந்த மாநாட்டைக் கூட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி (G Kishan Reddy) தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் திபெத்தில் இருந்து துறவிகள் கலந்து கொள்வார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்களின் பதில்கள் இன்னும் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.