[ஆதவன்]
வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தால் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்றுக்காலை போராட்டம் முன் னெடுக்கப்பட்டது.
சர்வதேச நீதிக்காகப் போராடி வரும் நாம் பல வருடங்கள் கடந்தும் நீதி மறுக் கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஏமாற் றத்துக்குள்ளாகி வருகின்றோம். இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீதும் அதன் விசாரணைகள் மீதும் நாம் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளோம்.
12 ஆணைக்குழுக்களுக்குமேல் அமைத்து விட்டார்கள். அனைத்துமே ஏமாற்று நாடகம். எனவே பிறக்கின்ற புதிய வரு டத்திலாவது எமக்கான நீதியை வழங்கு வதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண் டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.